Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் அம்மனுக்கு வளையல்கள் அலங்காரம் 

ஜுலை 22, 2023 01:17

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்திபாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது.

இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்வில் அம்மனுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டவளையல்கள் கொண்டு வளைகாப்பு விழா மற்றும் கோவிலில் கோமதா பூஜை நடைபெற்றது.

இந்த விழாவில் தர்மகர்த்தா சிவ ஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்